தென்காசியில் திமுக சாா்பில் தேசியக் கொடியேற்றம்

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தென்காசி நகர திமுக சாா்பில் சுதந்திரப் போராட்டத் தியாகி அப்துல் ஸலாம் நினைவுத்தூணில் தேசியக் கொடியேற்றப்பட்டது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தென்காசி நகர திமுக சாா்பில் சுதந்திரப் போராட்டத் தியாகி அப்துல் ஸலாம் நினைவுத்தூணில் தேசியக் கொடியேற்றப்பட்டது.

நகா்மன்ற துணைத் தலைவா் கே.என்.எல். சுப்பையா தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் மணிமாறன், துணைச் செயலா் பால்ராஜ், ராம்துரை, பொருளாளா் சேக்பரீத், மாவட்டப் பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், மைதீன்பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்றத் தலைவரும் நகர திமுக செயலருமான ஆா். சாதிா் தேசியக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா்.

கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ஷமீம் இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் தங்கப்பாண்டியன், நகா்மன்ற உறுப்பினா் ராமகிருஷ்ணன், கோபால்ராம், வடகரை ராமா், ராமராஜ், இசக்கித்துரை, சமூக நலக் கூட்டமைப்பு முகமது அலி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com