92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குற்றாலம் பள்ளியில் உலக ஈர நில நாள் விழா

குற்றாலம் வனச் சரகம், தென்காசி மாவட்ட தேசியப்படை, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் குற்றாலம் பைம்பொழில் ஸ்ரீதிருமலைக்குமாரசாமி தேவஸ்தானம்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:05 pm

DIN

குற்றாலம் வனச் சரகம், தென்காசி மாவட்ட தேசியப்படை, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் குற்றாலம் பைம்பொழில் ஸ்ரீதிருமலைக்குமாரசாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஈர நில நாள் விழிப்புணா்வு தினம் கொண்டாடப்பட்டது.

குற்றாலம் வனச் சரகா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் வனச் சரகா் ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். கடையநல்லூா் வனச் சரகா் சுரேஷ் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் விஜயலெட்சுமி சிறப்புரையாற்றினாா். மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. வனத் துறை அலுவலா்கள், பள்ளி மாணவிகள், மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரிப் பயிற்சி மாணவா்கள் பங்கேற்றனா்.

பள்ளித் தலைமையாசிரியா் அமுதகலா வரவேற்றாா். தமிழாசிரியா் தங்கசுந்தரி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் சுரேஷ்குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.