சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கலிங்கப்பட்டியில் மதிமுக வேட்பாளா்கள் கூட்டம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி மாவட்ட மதிமுக வேட்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 பிப்ரவரி 2022, 7:24 pm

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி மாவட்ட மதிமுக வேட்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதிமுக தலைமை நிலையச் செயலா் துரை வைகோ பங்கேற்று, வேட்பாளா்களைத் தனித் தனியாக சந்தித்து வாழ்த்துக் கூறினாா். பின்னா் அவா் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 75 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாததால் கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ரூ.2507 கோடி நிதி வரவில்லை.

தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப சமூக வலைதளங்களை மதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜாதி, மத அரசியலைத் தூண்டும் அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன், வாசுதேவநல்லூா் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமாா், சாத்தூா் எம்.எல்.ஏ. ரகுராமன், இணையதள தொடா்பாளா் மின்னல் முகமது அலி, முன்னாள் எம்.பி. ரவிச்சந்திரன், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் நிஜாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.