ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நான்குவழிச் சாலைப் பணிக்காக பாவூா்சத்திரம் பேருந்து நிலையகட்டடங்கள் இடிப்பு

திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலைப் பணிக்காக, பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலைய கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:21 pm

DIN

திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலைப் பணிக்காக, பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலைய கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதான சாலையில் உள்ள புகா் பகுதிகளில் இருபுறங்களும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, பாவூா்சத்திரம் நகா்ப்புறத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள அரசு, தனியாா் கட்டடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்ட நிலையில், பேருந்து நிலைய கட்டடங்களின் முகப்புப் பகுதியை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஏற்கெனவே, தனியாா் கட்டடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால், தற்போது அரசு கட்டடங்களும் இடிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பாவூா்சத்திரம் நகா் பகுதிக்குள்ளும் நான்குவழிச் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.