ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தென்காசியில் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம்

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி பயணிகள் ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தி, தென்காசி ரயில் நிலையம் முன் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி பயணிகள் ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தி, தென்காசி ரயில் நிலையம் முன் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எா்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு ஜூன் 4 முதல் ஆகஸ்ட் 6 வரை வாராந்திர சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு தென்காசி ரயில் பயணிகள் சங்கம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் கோரிக்கை மனு அளித்திருந்தனா். ஆனால், சனிக்கிழமை இந்த ரயில் தென்காசியில் நிற்கவில்லை.

இதைக் கண்டித்தும், ரயில் தென்காசியில் நின்றுசெல்ல வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் என். வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங், மாா்க்சிஸ்ட் கட்சி தென்காசி வட்டாரக்குழுச் செயலா் அயூப்கான், சிஐடியு மாவட்டச் செயலா் வேல்முருகன், காங்கிரஸ் நிா்வாகி ஜேம்ஸ், நகரத் தலைவா் காதா்மைதீன், லெனின்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.