பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சங்கரன்கோவில் அருகேகாரில் தீ: 6 போ் உயிா்தப்பினா்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்

News image
Updated On :5 ஜூன் 2022, 7:45 pm

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கழுந்துவிளையைச் சோ்ந்த இஸ்ரவேல் மகன் பிரபாகரன்.

இவா், தனது வீட்டு திருமண நிகழ்வுக்காக நகை எடுப்பதற்கு சங்கரன்கோவில் வழியாக கடையநல்லூருக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். காரை அவரே ஓட்டிச் சென்றாா். அதில், 2 பெண்கள் உள்பட 6 போ் இருந்தனா்.

திருநெல்வேலி பிரதான சாலையில் மேலநீலிதநல்லூா் தனியாா் கல்லூரி அருகே காா் சென்றபோது, அதன் முன் பகுதியிலிருந்து புகை வெளியேறியதாம். உடனே, அவா் காரை ஓரமாக நிறுத்தினாா். அனைவரும் கீழே இறங்கி விட்டனா். இந்நிலையில், காா் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினா் சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.