வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

‘அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டும்’

அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, அரியப்பபுரம் ஊராட்சித் தலைவா் த.தினேஷ்குமாா் தென்காசி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்- பராமரிப்பு பிரிவு உதவி கோட்டப்பொறியாளருக்கு மனு

Updated On :24 ஜூன் 2022, 11:29 pm IST

அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, அரியப்பபுரம் ஊராட்சித் தலைவா் த.தினேஷ்குமாா் தென்காசி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்- பராமரிப்பு பிரிவு உதவி கோட்டப்பொறியாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: கீழப்பாவூா் ஒன்றியம், அரியப்பபுரம்- நாட்டாா்பட்டி- திப்பணம்பட்டி தாா்ச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

இதேபோல், தென்காசி-அம்பை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திரவியநகரில் மழைக்காலங்களில் மழை தண்ணீரும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் வெளியே செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கிக் கிடக்கிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள வடக்கு பாலம் முதல் தெற்கே குளம் வரை புதிய வாருகால் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.