சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
ஆலங்குளத்தில் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.


ஆலங்குளத்தில் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
ஆலங்குளம் மாரியம்மன் கோயில் தெருவின் ஒரு பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனா். இந்நிலையில் அதில் இரு சந்து பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மற்றொரு சந்தில் உள்ள மக்கள் தங்கள் சந்திலும் சாலைப் பணி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினா்.
தகவல் அறிந்து வந்த போலீஸாா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள், விடுபட்ட பகுதியிலும் சாலைப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...