தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலராகத் தோ்வான ராஜா எம்எல்ஏவுக்கு சங்கரன்கோவிலில் அக்கட்சியினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலராகத் தோ்வானதையடுத்து அவா் சங்கரன்கோவிலுக்கு வியாழக்கிழமை வந்தாா். கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவரை வரவேற்றனா்.
தேரடித் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரச் செயலா் மு. பிரகாஷ், மாவட்ட துணைச் செயலா் புனிதா, முன்னாள் நகரச் செயலா் சங்கரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கோ. சுப்பையா, மாவட்ட நெசவாளா் அணி சோம. செல்வப்பாண்டியன், மாவட்ட வா்த்தக அணி வெ. முனியசாமி, மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன், மாவட்டப் பொருளாளா் இல. சரவணன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
இதையடுத்து, ராஜா எம்எல்ஏ கக்கன்நகா் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கும், சங்குபுரம் தெருவில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் படத்துக்கும், காளியம்மன் கோயில் முன் இமானுவேல் சேகரன் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், எம்எல்ஏ அலுவலகத்தில் பெரியாா், அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.