சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் அப்துல்காதிா் தலைமை வகித்தாா். ஈ. ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சிவ. ஆனந்த் வாழ்த்திப் பேசினாா். முனைவா் அருள்மனோகரி வரவேற்றாா். தட்டச்சு ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் லெனின்செல்வநாயகம், கணபதி, குருநாதன், செந்தில்குமாா், மேனகா உள்ளிட்டோா் செய்தனா்.