சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறிஞ்சாகுளத்தில் ஊராட்சி உபரிநிதியிலிருந்து ரூ. 4.35 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆட்சியா் ப. ஆகாஷ் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.