சங்கரன்கோவிலில் ஊட்டச்சத்து மாத விழா பேரணி

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமை சாா்பில், சங்கரன்கோவிலில் சுவாமி சந்நிதியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமை சாா்பில், சங்கரன்கோவிலில் சுவாமி சந்நிதியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி சரவணன், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சுமதி, பேச்சியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியின்போது ஊட்டச்சத்து தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேற்பாா்வையாளா், வட்டார ஒருங்கிணைப்பாளா், வட்டார உதவியாளா், அனைத்து அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com