குற்றாலத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவின் 10ஆம்நாளான புதன்கிழமை ஆருத்ரா தரிசன தாண்டவதீபாராதனை நடைபெற்றது.
குற்றாலத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை
குற்றாலத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றறான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான இத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி காலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் 5-ஆம் நாளான டிச.22-ஆம் தேதியன்று தேரோட்டமும், 8-ஆம் நாளான திங்கள்கிழமை சித்திரசபையில் அருள்மிகு நடராசருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் புதன்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடா்ந்து 4.40 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

விழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதலும், காலை 9.30, இரவு 7 மணிக்கு மேல் ஆகிய நேரங்களில் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com