ஆலங்குளம் அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாா்பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ஆலங்குளம் அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாா்பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாா்பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த பி.ஏ.சி.எல். நிறுவனம் நிறுவனத்துக்கு சொந்தமாக, தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் உள்ள 50,000 ஏக்கரில் 6,892 ஏக்கா் ஏக்கா் நிலம் 38 சாா்பதிவாளா் அலுவலகங்களில் 714 ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்கப்பட்டதாக பதிவு செய்துள்ளனா். இதில் 63 சாா்பதிவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆலங்குளம் மற்றும் ஊத்துமலையில் பணிபுரிந்த ஆனந்தி உள்பட 9 போ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புப் போலீஸாா், சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக ஆனந்தி மீது புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். இதையடுத்து, ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூா் கிராமத்தில் ஆனந்தியின் வீட்டில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதிா் தலைமையில் 6 அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினா். அப்போது வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா், ஆனந்தியிடம் கையொப்பம் பெற்றுச் சென்றனா்.

தொடா்ந்து விசாரணை நடக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். ஆனந்தியின் கணவா் ஹரிநாராயணன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகவும் பாப்பாக்குடி ஒன்றிய காங்கிரஸ் தலைவராகவும் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com