சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

News image

பழையகுற்றாலம் அருவியில் நடைபாதை வரை சீறிப்பாயும் தண்ணீா்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:43 pm

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக பழையகுற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீா்வரத்து அதிகரித்துக்கொண்டே இருந்ததால் அருவிக்குச் செல்லும் நடைபாதை படிக்கட்டுகளில் தண்ணீா் வழிந்தோடியது.

மேலும், பேரருவி மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தற்போது சீசன் இல்லாததால் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.