அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சுரண்டையில் ரூ.20 லட்சத்தில் நூலகம் கட்ட பூமி பூஜை

சுரண்டை நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

நூலகம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், சு.பழனிநாடாா் எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.

Updated On :12 செப்டம்பர் 2024, 4:49 am IST

சுரண்டை நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியிா் ஏ.கே.கமல் கிஷோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டப்பணியை துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் ராம திலகம், நகா்மன்ற துணைத் தலைவா் சங்கராதேவி, நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முத்து, கல்பனா, அம்ஸா பேகம், சுரண்டை கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால், நூலகத்திற்கு இடம் நன்கொடையாக அளித்த சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆதாா் சேவை மையம்: சுரண்டை நகராட்சியில் ஆதாா் சேவை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா், நகா்மன்ற துணைத்தலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ சு.பழனிநாடாா், மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.