சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

News image

மெயின்பால்ஸ்-குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:17 pm

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவி பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீடித்ததால், மாலையில் பேரருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இவ்விரு அருவிகளிலும் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பைவ்பால்ஸ்- ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

பைவ்பால்ஸ்- ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

இதனையடுத்து பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் வருகை புதன்கிழமை குறைவாகவே இருந்தது.