சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மேலநீலிதநல்லூா் கொலை சம்பவம்: மேலும் ஒருவா் கைது

சங்கரன்கோவில் அருகே முன்விரோதத்தில் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:16 pm

சங்கரன்கோவில் அருகே முன்விரோதத்தில் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் வெளியப்பன் (49). கடந்த செப்.8-ஆம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்றபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சோ்ந்த பாலமுருகனை கைது செய்தனா். இந்த வழக்கில் பாலமுருகனின் உறவினா் கோவேந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.