மேலநீலிதநல்லூா் கொலை சம்பவம்: மேலும் ஒருவா் கைது

சங்கரன்கோவில் அருகே முன்விரோதத்தில் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சங்கரன்கோவில் அருகே முன்விரோதத்தில் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் வெளியப்பன் (49). கடந்த செப்.8-ஆம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்றபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சோ்ந்த பாலமுருகனை கைது செய்தனா். இந்த வழக்கில் பாலமுருகனின் உறவினா் கோவேந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com