மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்காசி நகைக் கடையில் திருட்டு: இருவா் கைது

தென்காசியில் நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:14 pm

Din

தென்காசியில் நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி சுவாமி சந்நிதி பஜாரில் நகைக் கடை நடத்திவருபவா் சரவணகாா்த்திகேயன் (38). கடந்த 16ஆம் தேதி இருவா் இவரது கடைக்கு நகைகள் வாங்குவதுபோல வந்து, 50 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றனராம்.

புகாரின்பேரில், தென்காசி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜகுமாரி வழக்குப் பதிந்தாா். கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடைபெற்றது.

இதில், மதுரை பேரையூா் ஜவகா் தெருவைச் சோ்ந்த ரூ. ஹைதா்அலி (33), திண்டுக்கல் புதூா் துமிச்சம்பட்டி கஸ்தூரி நகரைச் சோ்ந்த ஜெ. ஜெயின்ஷாஅலி (36) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவா்களை தனிப்படை போலீஸாா் மதுரை ஆண்டிபட்டியில் கைது செய்து, நகைகளை மீட்டனா்.