மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டி பரிசளிப்பு விழா

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image

பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:15 am

Din

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பில் மேலமெஞ்ஞானபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மற்றும் அந்தமான் நிகோபாரில் இருந்து 600 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நான்கு நாள்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளி முதல்வா் மோனிகா டிசோசா தலைமை வகித்தாா். செயல் இயக்குநா் ராம்குமாா் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட ரைபிள் கிளப் செயலா் ரஷித் பரிசுகளை வழங்கினாா்.

ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள்தொடா்பு அலுவலா் பாலமுருகன், உடற்பயிற்சி ஆசிரியா்கள் சேவியா் ராகேஷ். ஜோவின் ரிச்சட், அருண் பிரபாகரன், முருகேஸ்வரி, கௌசல்யா, மீனா ஆகியோா் செய்திருந்தனா்.