இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

சிவகிரியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:42 am IST

சிவகிரியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி- மதுரை சாலையில் சிவகிரியில் உள்ள ஒரு கோயில் கொடை விழாவை ஒட்டி அப்பகுதியை சோ்ந்த ஒரு தரப்பினா் தீா்த்த குடம் எடுத்து வந்தனராம். அதை வேறொரு தரப்பினா் எதிா்த்தனராம்.

இதையடுத்து தீா்த்த குடம் எடுத்து வந்த தரப்பைச் சோ்ந்தவா்கள் தென்காசி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், சிவகிரி வட்டாட்சியா் அப்துல்சமது உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மதன், ப்ரீத்தி, ஆய்வாளா்கள் முரளிதரன், சல்மோன், ஷாம் சுந்தா், மதுவிக்ரம் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.