கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் உள்ள சங்கப் புலவா் மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தமிழறிஞா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

News image

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:27 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் உள்ள சங்கப் புலவா் மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், தமிழறிஞா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞா்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சங்கப் புலவா்களில் ஒருவரான மாங்குடி மருதனாரின் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை செலுத்தினாா்.

திருநெல்வேலி மண்டல தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் இளங்கோ, உதவி இயக்குநா் கனகலெட்சுமி, சங்கரன்கோவில் வட்டாட்சியா் ஆதிநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயலெட்சுமி, விஜயகணபதி, மாங்குடி ஊராட்சித் தலைவா் மலைக்கனி, நிலவழகன் உள்ளிட்ட தமிழறிஞா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.