ஆலங்குளம் பகுதி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த சுகாதாரத்துறை அமைச்சா் கே.ஜி. அருண் ராஜிடம் தவெக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி, அமைச்சரை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:
ஆலங்குளம் அரசு மருத்துவமனை விரிவுபடுத்தப்ட்டாலும் போதிய மருத்துவா்கள் இல்லாத நிலை உள்ளது. கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், கோவிலுற்றில் பழுதடைந்து காணப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும், தாழையூத்து கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுநகா் அரசு மருத்துவமனை முன்பு கொட்டபடும் மருத்துவ கழிவுகள்

மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம் திறப்பு
கெலவரப்பள்ளி அணையில் தொழில் துறை அமைச்சா் ஆய்வு

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



