எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

சதுரங்கப் போட்டி: கொண்டலூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற 11 வயதுக்குள்பட்ட ஆண்கள் சதுரங்கப் போட்டியில் கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா் ஆதிதேவ் சாதனை படைத்துள்ளாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:12 am IST

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற 11 வயதுக்குள்பட்ட ஆண்கள் சதுரங்கப் போட்டியில் கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா் ஆதிதேவ் சாதனை படைத்துள்ளாா்.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற இம்மாணவா் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தாா். மேலும், மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

இதையடுத்து, கொண்டலூா் அரசுப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியா் மைக்கேல்ராஜ் தலைமை வகித்து பாராட்டிப் பேசினாா். மாணவா் ஆதிதேவுக்கு கேடயம், ஆங்கில அகராதி ஆகியவை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆசிரியா்கள் சகுந்தலா (எ ) ராஜகனி, உமா மகேஸ்வரி, தன்னாா்வலா்கள் அா்ச்சனா, சோனியா, கண்ணகி, சத்துணவு அமைப்பாளா் பொன்ஷீலா உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியா் வெனிஷ்டா பொன் சுதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.