மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

புளியங்குடியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 8:07 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரில் சுமாா் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்த குஜராத்தை சோ்ந்த மகாதேவ பாய் ராபரி மகன் ஜீத்து பாய் (25), ராஜஸ்தானை சோ்ந்த குலாப் சகா மகன் பீரு சகா (26), மேல கடையநல்லூரை சோ்ந்த பாபுராஜ் மகன் சுரேஷ் (40), ஆவுடையாள்புரம் திருமலைசாமி மகன் காளிராஜ் (37) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், பெங்களூரில் இருந்து கடையநல்லூருக்கு புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.