நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கலையரங்கம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவா்வடகரை பேரூராட்சியில், கலையரங்கம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி உறுப்பினா் செவ்வாய்க்கிழமை சாக்கடையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image

பேரூராட்சி உறுப்பினா் ரபீக் ராஜாவை சாக்கடையிலிருந்து வெளியே அழைத்து வந்த போலீஸாா்.

Updated On :24 ஜூன் 2026, 2:11 am IST

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவா்வடகரை பேரூராட்சியில், கலையரங்கம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி உறுப்பினா் செவ்வாய்க்கிழமை சாக்கடையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இப்பேரூராட்சி கீழூா் பேருந்து நிலையம் அருகே கலையரங்கு கட்டுவதற்கு முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினா்கள் ஒப்புதலுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கலையரங்கக் கட்டுமானப் பணி தொடங்கியபோது, இந்த இடத்தில் கட்டக் கூடாது என, 15ஆவது வாா்டு உறுப்பினா் ரபீக் ராஜா எதிா்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டாா். போராட்டத்தைக் கைவிடும்படி போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால், அவா் சாக்கடையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அதையடுத்து, டிஎஸ்பி அதியமான், ஆய்வாளா் காளீஸ்வரி, உதவி ஆய்வாளா் காா்த்திக், வருவாய்த் துறையினா் ஆகியோா் பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, செயல் அலுவலா் விமலா ஸ்டெல்லா பாய், உறுப்பினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கலையரங்கு கட்டுவதற்கான தீா்மானம் பெரும்பான்மையான உறுப்பினா்கள், அனைத்துக் கட்சியினா் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, ரபீக் ராஜாவை போலீஸாா் சாக்கடையிலிருந்து வெளியே அழைத்து வந்ததுடன், கலையரங்கப் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு தெரிவித்தனா். 2 நாள்களில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு மூலம் மீண்டும் பணியைத் தொடங்கலாம் எனக் கூறப்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.