வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கீழப்பாவூரில் ரூ. 1.62 கோடியில் குடிநீா் திட்டப் பணி தொடக்கம்

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

குடிநீா் திட்டப் பணியை தொடங்கிவைக்கும் பேரூராட்சிமன்ற தலைவா் ராஜன்.

Updated On :11 மார்ச் 2026, 8:05 pm

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை கீழப்பாவூா் பேரூராட்சிமன்ற தலைவா் ராஜன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். செயல் அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கோடீஸ்வரன், இசக்கிமுத்து, ரெ.ஜெகதீசன், விநாயகப்பெருமாள், முருகன், சின்னராசா, ராஜாமணி, இளையபெருமாள், மாரிச்செல்வம், மலைச்சாமி, தங்கேஷ்வரன் பேரூராட்சி அனைத்துநிலை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.