புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கீழப்பாவூரில் ரூ. 1.62 கோடியில் குடிநீா் திட்டப் பணி தொடக்கம்

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

குடிநீா் திட்டப் பணியை தொடங்கிவைக்கும் பேரூராட்சிமன்ற தலைவா் ராஜன்.

Updated On :11 மார்ச் 2026, 8:05 pm

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பேரூராட்சியில் 2024-25-ஆம் வருட கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் குளத்துக்கரையில் குடிநீா் திட்டப் பணிகளை மேம்பாடு செய்தல் பணியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை கீழப்பாவூா் பேரூராட்சிமன்ற தலைவா் ராஜன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். செயல் அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கோடீஸ்வரன், இசக்கிமுத்து, ரெ.ஜெகதீசன், விநாயகப்பெருமாள், முருகன், சின்னராசா, ராஜாமணி, இளையபெருமாள், மாரிச்செல்வம், மலைச்சாமி, தங்கேஷ்வரன் பேரூராட்சி அனைத்துநிலை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.