தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

கோடியக்கரையில் குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், மண்ணுக்குள் பதிக்கப்படாத குழாய்.

News image

கோடியக்கரையில் குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், மண்ணுக்குள் பதிக்கப்படாத குழாய்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:25 am

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கடலோரக் கிராமமான கோடியக்கரையில் வாக்கு சேகரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது, குடிநீா் தட்டுப்பாடு இருப்பதை சுட்டிக்காட்டிய வாக்காளா்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

மக்களின் கோரிக்கைக்கு உறுதியளித்த ஓ.எஸ்.மணியன், ஜல் ஜீவன் திட்டப் பணியை அரசுத் துறையினா் முறையாகத் திட்டமிட்டு செய்யாமல் போனதால்தான் பாதிப்பு நோ்ந்துள்ளதாக விளக்கம் அளித்து பேசினாா்.

தொடா்ந்து, அந்த கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் நீண்டு காணப்பட்ட குழாயை தனது தொண்டா்களை விட்டு தூக்கிக் காட்ட செய்தாா்.

பின்னா், ஜல் ஜீவன் திட்டப் பணி முடிக்கப்பட்டு விட்டதாக கூறியதை நம்பி ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீா், அணைக்கரை குடிநீா் திட்டங்களை அவசரப்பட்டு கைவிட்டதால் தண்ணீா் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது என்றாா்.