வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தட்டாா்மடத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

தட்டாா்மடத்தில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதால், குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்.

Updated On :19 மே 2026, 1:08 am IST

தட்டாா்மடத்தில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதால், குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் பகுதி கிராம மக்களுக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோடைக் காலம் என்பதால் குடிநீா் போதுமான அளவு கிடைக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்நிலையில், தட்டாா்மடத்தில் கொம்மடிகோட்டை செல்லும் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடை அருகே உள்ள குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது.

தண்ணீா் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் தண்ணீா் வீணாவதாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.