பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீா்

செங்கம் துக்காப்பேட்டை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சாத்தனூா் அணையில் இருந்து செங்கம் பகுதிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீா் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், துக்காப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகம் முன் குடிநீா் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீா் வீணாகி வருகிறது.

இதுகுறித்து செங்கம் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, இந்தப் பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு, பழுதடைந்துள்ள குடிநீா் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.