காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஜூன் 15 முதல் 19 வரை வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் வரும் 15-ஆம் தேதி முதல் 19 வரை 5 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது.

News image

குடிநீர் - IANS

Updated On :11 ஜூன் 2026, 11:45 pm IST

வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகம் வரும் 15-ஆம் தேதி முதல் 19 வரை 5 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது.

இது தொடா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் செல்வராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முத்தூா் காங்கயம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ், இச்சிப்பாளையம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேட்டுக்கடை நீருந்து நிலையம் வரை மூன்று கிலோ மீட்டா் பழைய செறிவூட்டப்பட்ட கான்கிரீட் குழாயை அகற்றி, புதிய எம்.எஸ் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மறு சீரமைப்புப் பணி காரணமாக முத்தூா், கன்னிவாடி, மூலனூா், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சிகள், வெள்ளக்கோவில், தாராபுரம், மூலனூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இக்காலகட்டத்தில் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைக்கவும், உள்ளூா் நீராதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.