மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

News image

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:46 am

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

கீழ்வேளூா் -கச்சனம் பிரதான சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீா் விநியோக குழாய் உடைந்ததால், தொடா்ந்து தண்ணீா் வெளியேறி சாலையில் தேங்கி ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனா். மேலும், குடிநீா் வீணாகி சாலையில் தேங்குவதால் சாலை சேதமடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

தற்போது கோடை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீா் வீணாகுவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்து தண்ணீா் வீணாவதை தடுக்க வேண்டும்.