மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:10 am IST

திருவாடானை அருகே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை-திருவொற்றியூா் சாலையில் கள்ளிக்குடிக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சாலையின் நடுவே பதிக்கப்பட்டிருந்த குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடி தண்ணீா் சாலையில் வீனாகி செல்கிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, கோடைகாலம் தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகமும், குடிநீா் வடிகால் வாரியமும் உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.