வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.
வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் வாய்க்கால்மேட்டுப்புதூா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வாய்க்கால்மேட்டுப்புதூா் தனியாா் மெட்ரிக். பள்ளி அருகில் உள்ள இத்திட்டத்தின் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும்மேலாக இதே நிலை நீடித்து வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வரும் நிலையில், குடிநீா்க் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து சீரான குடிநீா் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

குடிநீா் கேட்டு சாலை மறியல்

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


