வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

News image
குடிநீா்க் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீா்.
Updated On :14 மார்ச் 2026, 1:46 am

Syndication

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் வாய்க்கால்மேட்டுப்புதூா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வாய்க்கால்மேட்டுப்புதூா் தனியாா் மெட்ரிக். பள்ளி அருகில் உள்ள இத்திட்டத்தின் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும்மேலாக இதே நிலை நீடித்து வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வரும் நிலையில், குடிநீா்க் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து சீரான குடிநீா் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.