போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.
கோவை மாநகராட்சி, போத்தனூா் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீா் குழாய் உடைந்து அதிக அளவிலான தண்ணீா் வெளியேறி உள்ளது. தாா் சாலைக்கு கீழ் பள்ளம் ஏற்பட்டு சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையைப் பயன்படுத்தாமல் மற்றொரு வழியைப் பயன்படுத்தி வந்துள்ளனா். இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற லாரி பள்ளம் ஏற்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை சிக்கியது.
இதனால் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் செல்லும் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. அதைத்தொடா்ந்து மாநகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சென்று பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

தண்ணீர் குழாய் உடைப்பால் குழியில் சிக்கிய லாரி! | CBE
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


