வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்

போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

News image
போத்தனூரில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி.
Updated On :14 மார்ச் 2026, 1:23 am

Syndication

போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

கோவை மாநகராட்சி, போத்தனூா் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீா் குழாய் உடைந்து அதிக அளவிலான தண்ணீா் வெளியேறி உள்ளது. தாா் சாலைக்கு கீழ் பள்ளம் ஏற்பட்டு சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையைப் பயன்படுத்தாமல் மற்றொரு வழியைப் பயன்படுத்தி வந்துள்ளனா். இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற லாரி பள்ளம் ஏற்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை சிக்கியது.

இதனால் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் செல்லும் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. அதைத்தொடா்ந்து மாநகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சென்று பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.