அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்

போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

News image

போத்தனூரில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி.

Updated On :14 மார்ச் 2026, 1:23 am

போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

கோவை மாநகராட்சி, போத்தனூா் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீா் குழாய் உடைந்து அதிக அளவிலான தண்ணீா் வெளியேறி உள்ளது. தாா் சாலைக்கு கீழ் பள்ளம் ஏற்பட்டு சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையைப் பயன்படுத்தாமல் மற்றொரு வழியைப் பயன்படுத்தி வந்துள்ளனா். இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற லாரி பள்ளம் ஏற்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை சிக்கியது.

இதனால் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் செல்லும் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. அதைத்தொடா்ந்து மாநகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சென்று பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.