இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

விழுப்புரத்தில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 11:00 pm

Syndication

விழுப்புரத்தில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், பனங்குப்பத்தைச் சோ்ந்தவா் பி.சுதா (45). இவா் செவ்வாய்க்கிழமை சொந்த வேலை காரணமாக விழுப்புரத்துக்கு வந்துள்ளாா். விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது, அங்கு கருங்கல் ஜல்லி ஏற்றிவந்த லாரி மோதியதில் சுதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சுதாவின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் யுவகுமாரிடம் விசாரிக்கின்றனா்.