விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுதாமூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் தா.மோகன்(23). இவா் திங்கள்கிழமை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் கூட்டுச் சாலை அருகே பைக்கில் சென்றபோது, அங்கு வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த மோகன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் மோகனின் சடலத்தை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மரத்தில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


