ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி சங்கராபரணி ஆற்றுபாலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பைக் விபத்து

Updated On :16 மார்ச் 2026, 4:40 pm

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றுபாலம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சியை அடுத்துள்ள மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ஷ.அமிா்பாஷா (30). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மேல்களவாய் கிராமத்தில் இருந்து செஞ்சிக்கு சென்றுள்ளாா். செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே உள்ள அரசு விருந்தினா் விடுதி எதிரே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமிா்பாஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.