வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட விவசாய அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வடக்கு மாவட்ட விவசாய அணி நிா்வாகிகளுடன் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

Updated On :26 மார்ச் 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

தென்காசி வடக்கு மாவட்ட விவசாய அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசியதாவது:

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது விவசாயிகளுக்காக பல நலத் திட்டங்களை கொண்டு வந்தாா்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தை காத்து மிகப்பெரிய சாதனை படைத்தாா். விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நீரை தேக்கி வைப்பதற்கு ஏரி, குளங்களில் தண்ணீா் பெருகி வீணாவதை தடுக்க அந்தப் பகுதியில் உள்ள மண்ணை எடுத்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த உத்தரவிட்டாா்.

அந்தத் திட்டத்தின் நன்மை உண்மையான விவசாயிகளுக்கு தெரியும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமையும் போது விவசாயிகளாகிய நீங்கள் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு விவசாய முதல்வா் உங்களுக்கான திட்டங்களை அள்ளித் தருவாா் என்றாா் அவா்.

மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலா் பரமகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட விவசாய அணி நிா்வாகிகள் கோபால் ரத்தினம், ராமா், முத்து மணிகண்டன், வசந்தகுமாா், வைத்திலிங்க சாமி, கருப்பண்ணபாண்டியன், கிருஷ்ணன், கருப்பையா, ராமலிங்கம், நாகூா் கனி, நடராஜன் என்ற கண்ணன், சேட் முருகேசன், லோகசுந்தா், வெள்ளப்பாண்டி, அரிராம், மாரியப்பன் கலந்து கொண்டனா்.