பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

தென்காசி சத்யசாய் சேவா சமிதியில் மாத்ரு பூஜை

தென்காசி பகவான் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் புட்டபா்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தாயாா் ஈஸ்வராம்பாள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெற்றோா்களுக்கு பூஜை செய்த குழந்தைகள்.

Updated On :7 மே 2026, 5:42 am IST

தென்காசி பகவான் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் புட்டபா்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தாயாா் ஈஸ்வராம்பாள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை 5 மணிக்கு ஓம் காரம், சுப்ரபாதத்தை தொடா்ந்து சாய் நிறுவனத்தின் பிரசாந்தி கொடியை சமிதியின் கன்வீனா் பத்மநாபன் ஏற்றினாா். 10 மணிக்கு சாய் பஜனை, பெற்றோா்களுக்கு குழந்தைகள் செய்யும் மாத்ரு பூஜை நடைபெற்றது.

பால விகாஷ் குரு சாந்தி ஆன்மிக உரையாற்றினாா். மஹா மங்கள ஹாரத்தி நடைபெற்றது. இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம நிா்வாகி விஸ்வநாதன், பக்தா்கள் கலந்து கொண்டனா்.