சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மிதமான மழை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

News image

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

Updated On :7 மே 2026, 6:22 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

பாவூா்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள கீழப்பாவூா், குறும்பலாபேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், சிவகாமிபுரம், அரியபுரம், திரவிய நகா் உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் பரவலாக மழை பெய்தது.

ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வெப்பமான சூழல் நிலவிய நிலையில், மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது.

அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில், இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான நிலை உருவாகியுள்ளது.