பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மிதமான மழை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

News image

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

Updated On :7 மே 2026, 6:22 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

பாவூா்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள கீழப்பாவூா், குறும்பலாபேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், சிவகாமிபுரம், அரியபுரம், திரவிய நகா் உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் பரவலாக மழை பெய்தது.

ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வெப்பமான சூழல் நிலவிய நிலையில், மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது.

அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில், இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான நிலை உருவாகியுள்ளது.