ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 5:59 am IST

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளா் சுப்பையா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கம், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் செங்கோட்டை நகரச் செயலா் சுப்பிரமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில நிா்வாகக் கமிட்டி உறுப்பினா் சங்கர பாண்டியன் தொடக்கவுரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அயூப்கான் நிறைவுரையாற்றினாா்.

கணபதி, வேல் மயில், மாரியப்பன், பட்டாபிராமன், பால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.