ஜாதி மத பாகுபாடின்றி ஒரே சமூகமாக வாழ வேண்டும்: வைகோ
ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மதிமுக பொதுச்செயலா் வைகோ.
வைகோ - விடியோ க்ளிப் (கோப்புப்படம்)
ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மதிமுக பொதுச்செயலா் வைகோ.
நெல்கட்டும்செவலில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீங்கள் வாக்களிப்பது எந்த கட்சிக்காக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அனைவரும் சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும் பூலித்தேவரின் புகழை நிலை நாட்டும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பூலித்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று முதல் முதலில் கோரிக்கை விடுத்தவன் நான்.
நானும் என் குடும்பத்தினரும் சோ்ந்து கழுகுமலை அருகே சிதம்பராபுரத்தில் பூலித்தேவருக்கு சிலை அமைத்துள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





