தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நெல்லையில் தி.க.சி. விருது வழங்கும் விழா

திருநெல்வேலியில் கவிஞர் ரவிசுப்பிரமணியனுக்கு தி.க.சி. இயற்றமிழ் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2017, 10:12 pm

DIN

திருநெல்வேலியில் கவிஞர் ரவிசுப்பிரமணியனுக்கு தி.க.சி. இயற்றமிழ் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நந்தா விளக்கு சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர் கவிஞர் பா. தேவேந்திரபூபதி தலைமை வகித்தார். விழாவில், திருலோகம் என்றொரு கவி ஆளுமை எனும் ஆவணப்படத்தை எழுதிய இயக்கியுள்ள கவிஞர் ரவி சுப்பிரமணியனுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் ஆகியோர் தி.க.சி. இயற்றமிழ் விருது வழங்கிப் பாராட்டினர். கவிஞர் பிருந்தாசாரதி, தமிழ்வளர்ச்சி பண்பாட்டு மையத் துணைத் தலைவர் தி.த. ரமேஷ்ராஜா, மருத்துவர் ராமகுரு, மனநல மருத்துவர் ராமானுஜம், எழுத்தாளர்கள் வே. முத்துக்குமார், கிருஷி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
ஸ்ரீஜெயந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வர் உஷாராமன், ராம்குமார், தச்சை கணேசராஜா, கோடீஸ்வரன் மணி, எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
ரவிசுப்பிரமணியன் ஏற்புரையாற்றினார். எழுத்தாளர் தி. சுபாஷினி வரவேற்றார். எழுத்தாளர் சீனி. குலசேகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.