திருநெல்வேலியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
மானூர் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த மாரியப்பன் மகள் சுபிட்ஷா (5). யூகேஜி படித்து வந்தார். கடந்த 15 ஆம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுபிட்ஷாவுக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்தனர்.
ஆனால், அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உக்கிரன்கோட்டை பகுதியில் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.