நிலா இலக்கிய வட்டம் சார்பில் 65-ஆவது நிலா முற்ற இலக்கியக் கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த பெருமாள்புரத்தில் நடைபெற்றது.
நிலா இலக்கிய வட்டத் தலைவரும் பேராசிரியருமான பா. வளன் அரசு தலைமை வகித்தார். புருஷோத்தமன் இறைவணக்கம் பாடினார். இலக்கிய வட்டப் பொறுப்பாளர் ந. ராசகோபால் வரவேற்றார்.
"தத்துவஞானி வேதாத்திரி மகான்' என்ற தலைப்பில் புலவர் இராம. ராசாராம் சுடலைமுத்து சிறப்புரையாற்றினார். சிவ.சத்தியமூர்த்தி, பு.சி. கணேசன், வீ. பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இலக்கிய வட்ட பொருளாளர் இரா.முருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.