பல்கலைக்கழகங்கங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (ஏப். 5) தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப். 5, 6) பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 300 வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
போட்டிகளை திருநெல்வேலி சரக காவல்துணைத் தலைவர் கபில்குமார் சராட்கர் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். துணைவேந்தர் கி.பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். வெள்ளிக்கிழமை (ஏப். 6) நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையினர் செய்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெஸ்ட்டில் அதிக சராசரி... டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஷுப்மன் கில்!

மகா யுத்தம்... தமிழில் பதிவிட்ட ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை!

குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்கள் கிடையாது: கிராம ஊராட்சிகள் அதிரடி





