வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

பாளையங்கோட்டை சாந்திநகரில் மகளிர், குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:37 am

பாளையங்கோட்டை சாந்திநகரில் மகளிர், குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
சட்ட உதவி தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு மாவட்ட நீதிபதி டி. ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் வி. இராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், சட்டம் சார்ந்த தீர்வுகள், அரசின் நலத் திட்ட உதவிகள், நிலம் தொடர்பான தீர்வு போன்றவை குறித்து பொதுமக்கள் நீதிபதிகளிடம் மனு அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 
ஆலோசகர் எஸ். புகழேந்திபகத்சிங் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என். கணேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.