குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கல்லிடைக்குறிச்சியில் வேன் மோதி முதியவர் சாவு

கல்லிடைக்குறிச்சியில் வேன் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:45 am

கல்லிடைக்குறிச்சியில் வேன் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அம்பாசமுத்திரம் புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(59). டெம்போ வேன் ஓட்டுநர். இவர், கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றாராம்.  கல்லிடைக்குறிச்சி கன்னடியன் கால்வாயை நெருங்கியபோது, எதிரே வந்த வேன் அவர் மீது மோதியதாம். இதில் படுகாயமடைந்த அவர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மாரியப்பன்இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீஸார்  வழக்குப் பதிந்து பேட்டையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அண்ணாமலை மகன் முருகனை கைது செய்து விசரிக்கின்றனர்.
மற்றொருவர் சாவு: கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்குப் பாப்பான்குளம் மயிலாடும் பாறைத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நம்பிராஜன்(41). இவரும், தனது  உறவினர் கீழப்புலியூர் உச்சிமகாளித் தெருவைச் சேர்ந்த தளவாய் மகன் மாரியப்பன் என்பவருடன் தனித்தனி மோட்டார் சைக்கிளில்  வெள்ளிக்கிழமை மாலை தெற்கு பாப்பான்குளத்தில் இருந்து கீழப்புலியூர் சென்று கொண்டிருந்தனர்.   அய்யம்பிள்ளைகுளம் பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த வேன் நம்பிராஜன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இது தொடர்பாக கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் ஆசிர்வாதபுரம் வேதமுத்து மகன் தனபால் செல்வின் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.